
மாலை செய்திகள் (26-04-2026)
கொடைக்கானலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - "செல்பி" எடுத்து மக்கள் மகிழ்ச்சிசட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வுக்காக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றுள்ளார். இன்று காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நட்சத்திர ஏரியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் அவருடன் உற்சாகமாக ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையம், செம்மறி ஆடு ரோம ஆராய்ச்சி மையம், சூரிய ஆராய்ச்சி கூடம், ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களை அடுத்தடுத்த நாட்களில் அவர் பார்வையிட உள்ளார்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.