
ஆன்மிகம் அறிவோம்...தேவைக்கு ஏற்ப உபதேசிக்க வேண்டும்- ஆன்மிக கதை
மற்றவர்களுக்கு என்ன தேவையோ அல்லது எது சொன்னால் அவர்களுக்கு புரியுமோ, அதை மட்டும்தான் சொல்ல வேண்டும். புரியாத விஷயங்களை மெனக்கிட்டு சொல்றது, நம்மைதான் முட்டாளாக்கும் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம். அந்த ஊரில் மிகவும் பிரபலமான ஒரு குரு இருந்தார். அவர் முற்றும் துறந்த முனிவர். அனைத்து சாஸ்திரங்களையும், வேதங்களையும், புராணங்களையும் கரைத்துக் குடித்தவர். அவரை ஒரு ஊரில் பிரசங்கம் செய்வதற்காக அழைத்திருந்தனர். கூட்டத்திற்கு எப்படியும் 10 ஆயிரம் பேராவது வருவார்கள் என்று அந்த ஊர் பெரியவர்கள், நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.மழையின் காரணமாக அங்கே தண்ணீர் குளம்போல் தேங்கியிருந்தது. கூட்டத்தை இனி…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.