
ஆன்மிகம் அறிவோம்...மார்க்கண்டேயர் ஆலயம்
எமன் மீண்டும் உயிர் பெற்ற தலம் மார்க்கண்டேயன் உயிரை பறித்து செல்லமுடிவு செய்த எமன் துணிச்சலாக திருக்கடையூர் தலத்துக்குள் நுழைந்தான். இதை கண்டதும் மார்க்கண்டேயர் ஓடிச் சென்று சிவலிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டார் என்றாலும் எமன் பாசக்கயிறை வீசினான். அந்த கயிறு சிவலிங்கம் மீதும் பட்டது. அவ்வளவு தான்..... ஆவேசம் அடைந்த ஈசன் லிங்கத்தை பிளந்தபடி வெளியில் வந்தார். தன் இடது காலால் எமனை ஓங்கி உதைத்தார். ஒரே ஒரு உதைதான். ஈசன் உதைத்தால் யாரால் தாங்கிக் கொள்ள முடியும்? அந்த இடத்திலேயே எமன் உயிர் பிரிந்தது. எமன் செத்துப் போனால் என்ன ஆகும்? அதன்பிறகு உலகில் யாருமே மரணம் அடைய வில்லை. இதனால் உலகில் மக்கள்…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.